Monday, November 23, 2009

சில நேரங்களில்...

சில நேரங்களில்...
எங்கோ ஊற்றெடுத்த
யாருக்கோ சொந்தமான
என் கோபம்
உன் மீது திரும்பலாம்.

சில நேரங்களில்...
உன் கனவுகள் பட்டியலிடும்
உன் கண்கள் ஏங்கும்
பொருட்கள் யாவும்
வாங்கும் சக்தி
நம் வரவுக்கு
இல்லாமல் போகலாம்.

சில நேரங்களில்...
காய்ச்சலில் சரிந்து
களையற்ற முகத்துடன்
மூன்று நாள் தாடியுடன்
நான் படுக்கையில் கிடக்கலாம்.

சில நேரங்களில்...
சமூகத்தால் விதைக்கப்பட்டு
என்னுள்ளே அடைக்கப்பட்ட
ஆணாதிக்க எண்ணம் எப்பொழுதேனும்
வெளிவந்து உன்னைக் கீறலாம்.

இந்தத் தருணங்களைக் கடந்தும்
என் மீதான உன் காதல்
திருமணத்திற்குப் பின்
துளியேனும் குறையாது
தீர்க்கமாய் நிலைக்குமாயின்..

இந்தப் பூமியில் சொர்க்கமீனுவேன்.