Sunday, July 26, 2009

கூகுல்-க்கும் கூட
உன்னைப் பற்றித்
தெரிந்திருக்கிறது.
"தேவதை கவிதைகள்"
என்று தேடினால்
முதல் பத்து முடிவுகளும்
நான் உன்னைப் பற்றி
என் வலைப்பூவில் எழுதிய
பதிவுகளைச் சுட்டுகின்றது.

வர்கள்
கனவுகள் விதைத்து,
குருதியும் கண்ணீரும்
தெளித்து வளர்த்தனர்.
அக்கனவுகள்
நினைவுகளாய் பூத்து
கனியாகும் என்று.
ஆனால் இன்று
அவர்கள் அறுவடை செய்வதோ
மீண்டும் கனவு மூட்டைகளை.

ம் காதலைப் பகிர்ந்து
நாம் இருவரும் மீண்டும்
புதிதாய்ப் பிறந்த அந்நாளை
ஏன் நம் இருவருக்கும் பொதுவான
பிறந்த நாளாய்க் கொண்டாடக் கூடாது?

ம் பிரிதலின்
கடைசிச் சந்திப்பில்
ஈரமாயின
உதடுகளும், கண்களும்.

சபதம்

ன் பாதத்தைத் தொட்ட
அந்தக் கடல் அலையின்
கர்வக் கூச்சல் கண்டு,
மற்றொரு அலை சபதம் செய்தது.
தன் உயிர் விட்டு
வான் சென்று
மழைத் துளியாய்
பூமி வந்தாயினும்
ஒரு நாள்
உன் நெற்றியை முத்தமிடுமென்று.