Friday, January 2, 2009

கூசாமல் எழுதுகிறேன்

தொல்காப்பியம் தொட்டதில்லை

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பள்ளிச் செய்யுளோடு சரி

கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது

நானறிந்த குறட்பா எண்ணிக்கை

பாரதியும் சரி அவன் தாசனும் சரி

நான்கைந்து வரிகள் அதிகபட்சம்

பாவகை தமிழில் பலவிருந்தும்

தேர்ச்சி ஒன்றிலும் இல்லை

இருப்பினும்...

கூசாமல் எழுதுகிறேன்

'புதுக்கவிதை' என்ற போர்வையில்

அதை வலைப்பதிவும் செய்கிறேன்

யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.

1 comments:

இரசிகை said...

baarathiym sari.. avan thaasanumsari.. yentra varikalukku kaith thattalkal..