Tuesday, April 28, 2009

வாழை நடும் வேளை

உன் கண்ணிரண்டு கொண்டு

நெருங்கினால் வாள் வீசுகிறாய்

மறுகிச் சென்றால் அம்பு தொடுக்கிறாய்।


கன்னியுன் போர் யுக்தியில்

சல்லியாய் நொருங்குகிறது மனம்.

சமாதானக் கொடி நீட்டுகிறேன்

சாகும் வரை உன்னடிமையென

சாசனம் தருகிறேன்.

வாளையும் வில்லையும் வீசிவிட்டு

உன் வீட்டில் வாழை நடச் செய்!

0 comments: