Tuesday, April 28, 2009

Inspiration from Vairamuthu's 'Duet' Lyrics

இமை பூட்டும் என் கருவிழியில் சிறைபட்டவளும் நீ தான்

இமை கிழித்து நீர் வழி வெளி வந்தவளும் நீ தான்


பெரும் ஓவியங்கள் தோற்றிடும் பேரழகும் நீ தான்

நெடுந் துயரதில் எனை ஆழ்த்தியவளும் நீ தான்

சங்கக் கவிகளை உயிர்த்தெழச் செய்தவளும் நீ தான்

சகமனிதர்களைப் புன்னகையால் கொன்றவளும் நீ தான்


பெண்ணின் இலக்கணம் வரைந்தவளும் நீ தான்

பிரிவின் வலி நெஞ்சில் குத்தியவளும் நீ தான்


உடல் தின்னும் தீயைச் சுட்டவளும் நீ தான்

உயிர் போக்கும் அமிலத்தைச் சுரந்தவளும் நீ தான்


காதலின் அரிச்சுவடி எனக்குத் தந்தவளும் நீ தான்

காலனின் வருகை வழி காட்டியவளும் நீ தான்


என் கவிதைக்குக் கருப்பொருளாய் இருந்தவளும் நீ தான்

என் கண்ணீரின் காரணியாய் இருப்பவளும் நீ தான்।


(An inspiration from Vairamuthu's 'Duet' Lyrics )

0 comments: