நம் நட்புப் பாலில்
காதல் துளி விழுந்துவிட்டது.
என் காதலை
உன்னிடம் சொல்வதால்
நான் உன்னிடம்
அந்நியப்பட்டுப் போகலாம்,
நீ மறுக்கும் பட்சத்தில்.
இந்த அபாயம் தெரிந்தே
பறித்துச் செல்கிறேன்
இன்றலர்ந்த ரோஜாவொன்றை.
நம் நட்பிற்கு
இன்று மரணம் நிச்சயம்.
என் காதலை
நீ ஏற்றாலும்
ஏற்காவிடினும்!
ஏற்றால் உன் கூந்தலிலும்
இல்லையெனின்
நம் நட்பின் கல்லறையிலும்
இந்த ரோஜா ஏறிக்கொள்ளும்.
என் காதலை
உன்னிடம் சொல்வதால்
நான் உன்னிடம்
அந்நியப்பட்டுப் போகலாம்,
நீ மறுக்கும் பட்சத்தில்.
இந்த அபாயம் தெரிந்தே
பறித்துச் செல்கிறேன்
இன்றலர்ந்த ரோஜாவொன்றை.
நம் நட்பிற்கு
இன்று மரணம் நிச்சயம்.
என் காதலை
நீ ஏற்றாலும்
ஏற்காவிடினும்!
ஏற்றால் உன் கூந்தலிலும்
இல்லையெனின்
நம் நட்பின் கல்லறையிலும்
இந்த ரோஜா ஏறிக்கொள்ளும்.
1 comments:
nalla kavithai....!
natpil kaathal thavaralla yenbathu en karuththu...:)
kaathalai sonnatharkaaga natpai muriththuk kolvathu natpumalla..!
Post a Comment