Monday, August 31, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள் (2)

முன்பொருமுறை முயன்றது போல் ஓரிரு வரிகளில் கதை சொல்ல முயன்று பார்த்தேன் மறுபடியும். 'Science Fiction' கதைகளே எனக்குப் பெரும்பாலும் தோன்றுகிறது :-( . 


1.தலைப்பு: கி.பி. 3292

ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு - ' நீராவி எஞ்சின்' " 

2. தலைப்பு: பூமியை நெருங்கும் ஒரு விண்கலத்தினுள்....

"இந்த கிரக வாசிகளைப் பார், வித்தியாசமாய் இருக்கிறார்கள்! ஒரேயொரு சிறிய தலையுடன், இரண்டே கைகளுடன் நம் உள்ளங்கை அளவில் இருக்கிறார்கள். "

3. தலைப்பு: அவன்-அவள் மாற்றம்

மகனின் பதினாலாவது பிறந்த நாளுக்கு தந்தை ஆசையாய் இரண்டு சட்டைகள் வாங்கி வந்தார். மகனோ கண்ணாடி முன் தனிமையில் அக்காவின் உடைகளை அணிந்தபடி.

4. தலைப்பு: இயந்திரம் + மனிதன் 

உடம்பில் வெடிமருந்துகள் கட்டிக்கொண்டு கூட்டத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு நுழைந்தான் அவன். கணினியில் அவனுக்கு கட்டளைகள் பிறப்பித்தவாறு அந்த இயக்கத்தின் 'அறிவியல் பிரிவு' வல்லுனர்கள்.  

1 comments:

இரசிகை said...

nalla muyarchi.......... :)