Monday, May 17, 2010

அரவம் இல்லா புற்று

என் குரலில் துக்கம் மறந்து  
என் பார்வையில் தூக்கம் தொலைத்து
என் கண்களில் அடைக்கலம் தேடும்
காதலியொருத்திக் காத்துக்கிடக்க
 
அடகுவைத்த நகைகளையும்
அடக்கிவைத்த புதுவீட்டு ஆசையையும்
என் சம்பளத்தில் மீட்டெடுக்க
விழைவோர் வீட்டிலிருக்க
 
சிலருடன் பகிர்ந்த கனவுகளும்
சிலாகித்து என்னுள் விதைத்த கனவுகளும்
நீண்டுயர்ந்துப் பரவிக் கிடக்க
 
சீரணக் கோளாறாய் இருக்குமென
சிகச்சை பெற சென்றவிடத்தில்
 
அரவம் இல்லா புற்று ஒன்று
அரவமில்லாமல் வயிற்றில் அடர்கிறதென்றனர்
ஆண்டு ஒன்று ஆயுள் அதிகமாம்
எனக்கும் என் உணர்வுக்கும்.
 
கனவுகளை எண்ணிய  நான்,
இப்பொழுதோ
நாட்களையே எண்ணுகிறேன்.

3 comments:

இரசிகை said...

remba nal kazhichchu vanthirukkeenga..ivvalavu sokak kavithaiyudan:(

vasoolraja MBBS......zaheer ninaivukku varraan!!

devi said...

hey unmayave romba nalla iruku... continue pannu....

Suresh K said...

'Zaheer' enakkum gnabagam vanthathu itha eluthitu thirumba naan vaasikum bothu :-)!