Saturday, May 29, 2010

அக்கினிப் பறவை

கடந்து செல்லும் உந்தன்
கடைக்கண் பார்வையின்
வீச்சு கிட்டாததால்
ஒரு அக்கினிப் பறவை
என்னுள் தோன்றி
தன் சிறகுகளை விரித்து
என்னை மெல்லென
பொசுக்க ஆரம்பித்தது...

போனால் போகிறதென்று
நீ வீசிய ஓரக்கண் பார்வையால்,
நீரூற்று ஒன்று என்னுள் தோன்றி
அத்தணலைத் தணிக்க ஆரம்பித்தது...

போகிற வாக்கில்
ஒரு புன்னகையும் சேர்த்து நீ பூத்திருந்தால்,
எனக்கே எனக்கான பிரத்யேக
பனிக்கட்டி மழையே பொழிந்திருக்குமே!!

1 comments:

devi said...

wow.. wow... akka'vum sonna super'am