Wednesday, December 17, 2008

நான் மறப்பேனோ?

காவியங்களும் காப்பியங்களும்
போற்றிப் புகழ்ந்துரைத்த
காதலும், வீரமும், நட்பும்,
கற்பும், நாடும், மொழியும்,
ஏனைய பலவும் காலத்தின் ஓட்டத்தில்
மாறியிருக்கலாம், இலக்கணம் தவறியிருக்கலாம்।
ஆனால்...
ஆதியிலும் அந்தியிலும் வான்கடலில்
தினமும் அலங்கார ஓவியம் சமைத்திடும்
ஆதவன் போல் மாறாதிருப்பது,
சுயநலப் பேயின் நிழல் கூட அண்டாதிருப்பது,
பிரம்மனின் ஆக்கலையும் மாலின் காத்தலையும்
இப்புவிதனில் திறம்படச் செய்யும்
உனையும் எனையும் ஈன்றெடுத்தவரின் அன்பே...

உயிர் தந்த எந்தையும்
உயிர் காத்த அன்னையும்
பின் இவ்வுடல் வளர்க்க
அவ்விருவுடல் நலிந்த கதையும்
என்னுயிர் உடல் நீங்கினும்
நான் மறப்பேனோ?

0 comments: