Wednesday, December 10, 2008

கற்பனை வறட்சி....

சிந்தனைச் சுரங்கத்தில் ஓர் கவிதைக்கான

கருப்பொருளின் தேடலில் நான்.

நீண்டு வளைந்துச் சென்ற பாதைகள் எங்கும்

கற்பனை வறட்சியும் வறுமையுமே பிரதானமாய்.

அலைந்து களைத்து, தோல்வியுடன் வெளிவந்தேன்.


என் வீட்டு கொலுவிற்கு புடவையில் வந்த நீ

சிந்திய பார்வைகளும் சிதறிய புன்னகையும்

கொட்டிக் கொடுத்தன எனக்கு

பல நூறு கவிதைக்கான கருப்பொருளை!

0 comments: