Wednesday, December 10, 2008

நானும் ஏகலைவன் தான்

நானும் ஏகலைவன் தான்

தொலைவிலிருந்தே கவிதை புனைய

கற்றுக் கொண்டேன் உன்னிடமிருந்து.

கட்டை விரல் காணிக்கைக் கேட்காதே

மூன்று முடிச்சுகள் போடுவதில் சிரமமிருக்கும்!

உனக்காகவே துடிக்கும் என் இதயம்

வேண்டுமானால் கேள் தருகிறேன், மகிழ்வாய்.

0 comments: