Saturday, August 16, 2008

மெளனம் கலைவாய்!



மெளனம் கலைவாய்!
மேகக் கடல் சொட்டும் ஓர் உயிர்த்
துளிக்கு
ஏங்கும் விவசாயி போல
உந்தன் ஓர் வார்த்தைக்கு ஏங்க வைக்கின்றாய் என்னை
மெளனம் கலைவாய் பெண்ணேமெளனம் கலைவாய்!

சொல்லினிது ஆயினும் வன்சொல்லாயினும்
சொல்லிவிட்டுச் சென்றுவிடு
இனிதாயின் இன்பத்தில் மிதப்பேன்
கடிதாயின் வடுவுடன் வாழப் பழகுவேன்
மெளனம் கலைவாய்!

காத்திருக்கும் பொழுது யாவும்
கத்தி பாதி செருகிய தொண்டையாய்
சிக்கித் தவித்து துன்புறுகிறேன்
முழுதும் செருகி அமைதி கொளச் செய் அல்லது
நீக்கிவிட்டு சிகிச்சை செய்।

மெளனம் கலைத்துவிடு!

0 comments: