Saturday, August 16, 2008

மொட்டை மாடி



மொட்டை மாடியில் வார இதழின்
நான்கு வரி கவிதையை ரசித்தபடி நான்।

காய்ந்த துணிகளைப் பொறுக்க
கவிதைத் தொகுப்பாய் நுழைந்தாய்!

வார இதழை நான் மூட...
உன்மலர் இதழை நீ திறந்து,
'பனி பார்த்து!' என்றாய்।
'பரவாயில்லை' என்றேன்,
உன் விழி பார்த்து!

குறும்பு புன்னகை வீசிவிட்டு
பொறுக்கிச் சென்றாய்
துணிகளையும்,என் இதயத்தையும்!!!

0 comments: