Saturday, August 16, 2008

ஏக்கம்...

காலை படுக்கை மடிக்கும் முன்

உனது அழைப்போ குறுஞ்செய்தியோ,

வணக்கம் சொல்லும் எனக்கு.

அலுவல் நிமித்தம் அழைக்க மறந்தாலோ,

சிறுசினங் கொண்டு உனைத் திட்டினாலோ,

உன் தூய கண்ணீரால் தண்டிப்பாய் எனை

நானிங்கு உணவருந்தாவிடில், அங்கு விரதம் உனக்கு

சிறுதலைவலி ஆயினும், அன்னையின் அன்போடும் அக்கறையோடும்

ஒவ்வொரு மணியும் நலம் விசாரிப்பாய்

காணும் போதெலாம் பரிசுகள் அள்ளித்தருவாய்

பிரியும் வேளை ஆனந்த ஏக்கமும் உள்ளக் களிப்பும்,

மீண்டும் சந்திக்கும் நாளின் எதிர்பார்ப்பையும் விட்டுச்செல்வாய்.

இன்று....என்னுள் விட்டுச்சென்றிருக்கிறாய்....

உதிரம் கொட்டும் இதயத்தை!

0 comments: