என்னை நீங்குவது
உன் உரிமையெனில்
என்னுள் உனை
நீக்கமறச் செய்வது
என் இருத்தலின் ஆதாரம்.
என்னை நீங்குவது
உன் உரிமையெனில்
என்னுள் உனை
நீக்கமறச் செய்வது
என் இருத்தலின் ஆதாரம்.
Labels: காதல்
Posted by Suresh K at 1/10/2009 10:20:00 PM 0 comments
கனவுகளை நான்
தொலைத்துவிட்டதால்
நினைவுகளை விட்டு நான்
தொலைய நினைக்கிறேன்.Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/10/2009 10:19:00 PM 0 comments
தும்மலின் முடிவில்
அன்று நான்
அனிச்சையாய் கூறிய 'அம்மா',
நினைவூட்டியது எனக்கு
மறுநாள் அவளுடைய
பத்தாம் ஆண்டு திதி என்று.
தும்மிய பின் மெளனம் காக்கும்
என் பையனிடம்
''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'
என்கிறேன் சில நாட்களாய்.
தும்மலுக்கு நன்றி.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/10/2009 10:17:00 PM 2 comments
தொல்காப்பியம் தொட்டதில்லை
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
பள்ளிச் செய்யுளோடு சரி
கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது
நானறிந்த குறட்பா எண்ணிக்கை
பாரதியும் சரி அவன் தாசனும் சரி
நான்கைந்து வரிகள் அதிகபட்சம்
பாவகை தமிழில் பலவிருந்தும்
தேர்ச்சி ஒன்றிலும் இல்லை
இருப்பினும்...
கூசாமல் எழுதுகிறேன்
'புதுக்கவிதை' என்ற போர்வையில்
அதை வலைப்பதிவும் செய்கிறேன்
யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/02/2009 05:09:00 PM 1 comments
திறந்திருந்தால் உள்ளதையும்
மூடியிருந்தால் உள்ளத்தையும்
திரையிடுகிறது மூளையில்
இமையெனும் மாயத்திரை!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/02/2009 05:04:00 PM 0 comments
தங்கத் தட்டும் வெள்ளித் தட்டும்
மாறி மாறி மிதக்கின்றது
குளத்தில் சூரியனும் சந்திரனும்।
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 1/02/2009 05:01:00 PM 0 comments
நீ விட்டெறிந்த கல்லால்
கலங்கியது முகம்
தண்ணீரில் என் பிம்பம்.
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 1/02/2009 04:58:00 PM 1 comments
முதல் மாத சம்பளத்தில்
கட்டிய கனவுக் கோட்டை
நொருங்கியது முழுவதுமாய்.
பேருந்தில் நானும்
என் கிழிந்த பையும்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/02/2009 04:48:00 PM 0 comments
ஒவ்வொரு முறையும்
மொட்டை மாடியிலிருந்து எக்கி
மாங்காய் பறித்து ருசித்தவுடன்
குற்றவுணர்ச்சி தொண்டையில் சிக்குகிறது
கிளை என் வீட்டிலும்
வேர் பக்கத்து வீட்டிலும்!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 1/02/2009 04:41:00 PM 0 comments
நம் முத்தச் சத்தத்தைக்
குறைத்துக் கொள்வோம்
காமத்துப் பாலில் மேலும் சில பாக்கள் சேர்க்க
கல்லறையிலிருந்து உயிர்த்தெழப் போகிறான் வள்ளுவன்
நேற்றே வாத்ஸ்யாயனர் எழுத்தாணியோடு
ஓலை தேடி அலைந்ததாய் கேள்வி!
Labels: காதல்
Posted by Suresh K at 1/02/2009 04:34:00 PM 0 comments
காவியங்களும் காப்பியங்களும்
போற்றிப் புகழ்ந்துரைத்த
காதலும், வீரமும், நட்பும்,
கற்பும், நாடும், மொழியும்,
ஏனைய பலவும் காலத்தின் ஓட்டத்தில்
மாறியிருக்கலாம், இலக்கணம் தவறியிருக்கலாம்।
ஆனால்...
ஆதியிலும் அந்தியிலும் வான்கடலில்
தினமும் அலங்கார ஓவியம் சமைத்திடும்
ஆதவன் போல் மாறாதிருப்பது,
சுயநலப் பேயின் நிழல் கூட அண்டாதிருப்பது,
பிரம்மனின் ஆக்கலையும் மாலின் காத்தலையும்
இப்புவிதனில் திறம்படச் செய்யும்
உனையும் எனையும் ஈன்றெடுத்தவரின் அன்பே...
உயிர் தந்த எந்தையும்
உயிர் காத்த அன்னையும்
பின் இவ்வுடல் வளர்க்க
அவ்விருவுடல் நலிந்த கதையும்
என்னுயிர் உடல் நீங்கினும்
நான் மறப்பேனோ?
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 12/17/2008 10:57:00 PM 0 comments
விடுகதை ஒன்றைச் சொல்லிவிட்டு
விடைதரு முன்னே மாண்டுவிட்டாய்.
வீடுவாசல் துறந்து வீதி காடுகளில்
விடை தேடிப் பயணித்தேன்.
கானல் நீர் போல் தோன்றும் விடைகள்
நெருங்கிச் சென்றால் கரைந்து போகும்.
தேடுதல் என்னவோ விடைகளுக்காகத் தான்
கிடைத்ததோ மேலும் சில நூறு வினாக்கள்!
கேள்விக் கணைகள் கொக்கிகளாய் உடம்பைத் துளைக்க
சுமைதாங்கிக் கல்லில் என் பாரம் இறக்கினேன் ஓய்வுக்காக.
இதுவரை வந்தவர் யாவரும் கேள்விக் கொக்கிகளின்
இரணத்தால் இதோடு திரும்பியிருந்தனர்.
விடை தேடும் வேலையை மூட்டை கட்டலாமென்று
வந்த பாதை பார்த்தேன், ஆயிரம் காலடித்தடங்கள்.
எதிர்த்திசை நோக்கினேன், சுவடுகளில்லாமல் நீண்டிருந்தன.
விடுகதையின் விடை எங்கிருந்தோ எனை அழைக்க
பயணித்தேன் என் சுவடுகள் பதித்து.
கொக்கிகள் இப்பொழுது சுகமாய் இருந்தன!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 12/10/2008 07:59:00 PM 0 comments
சிந்தனைச் சுரங்கத்தில் ஓர் கவிதைக்கான
கருப்பொருளின் தேடலில் நான்.
நீண்டு வளைந்துச் சென்ற பாதைகள் எங்கும்
கற்பனை வறட்சியும் வறுமையுமே பிரதானமாய்.
அலைந்து களைத்து, தோல்வியுடன் வெளிவந்தேன்.
என் வீட்டு கொலுவிற்கு புடவையில் வந்த நீ
சிந்திய பார்வைகளும் சிதறிய புன்னகையும்
கொட்டிக் கொடுத்தன எனக்கு
பல நூறு கவிதைக்கான கருப்பொருளை!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 12/10/2008 07:37:00 PM 0 comments
நானும் ஏகலைவன் தான்
தொலைவிலிருந்தே கவிதை புனைய
கற்றுக் கொண்டேன் உன்னிடமிருந்து.
கட்டை விரல் காணிக்கைக் கேட்காதே
மூன்று முடிச்சுகள் போடுவதில் சிரமமிருக்கும்!
உனக்காகவே துடிக்கும் என் இதயம்
வேண்டுமானால் கேள் தருகிறேன், மகிழ்வாய்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 12/10/2008 07:36:00 PM 0 comments
மண்ணோடு மழை சேர்ந்த
மகத்தான ஓர் மாலையில்
நம் கண்களின் சங்கமத்தில்
இடியும் மின்னலும் சாரலும்
அரங்கேறியது வெளியில் மட்டுமல்ல
என்னுள் என் மனதிற்குள்ளும் தான்!
Labels: காதல்
Posted by Suresh K at 12/10/2008 07:35:00 PM 0 comments