தொல்காப்பியம் தொட்டதில்லை
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
பள்ளிச் செய்யுளோடு சரி
கணக்குப் போட்டால் பத்தைத் தாண்டாது
நானறிந்த குறட்பா எண்ணிக்கை
பாரதியும் சரி அவன் தாசனும் சரி
நான்கைந்து வரிகள் அதிகபட்சம்
பாவகை தமிழில் பலவிருந்தும்
தேர்ச்சி ஒன்றிலும் இல்லை
இருப்பினும்...
கூசாமல் எழுதுகிறேன்
'புதுக்கவிதை' என்ற போர்வையில்
அதை வலைப்பதிவும் செய்கிறேன்
யாரென்ன செய்வரென்ற தைரியத்தில்.
