ஒரு வேலையும் இன்றி
சும்மாவே சுற்றிக் கொண்டிருக்கின்றன
கடிகார முட்கள்
***
ஒரு மணி நேரத்திற்கொருமுறை
இடம் பொருள் ஏவலறியாது முத்தப் பரிமாற்றம்
கடிகாரத்துக்குள்.
***
அவர் ஒருமுறை மிதித்ததில்
ஐம்பது பேர் தள்ளாடிப் போனார்கள்
பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்.
Monday, August 17, 2009
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/17/2009 01:24:00 PM 4 comments
Friday, August 14, 2009
விடியல் ஆரம்பித்தது
கால்சென்டர் பணியில்
***
இவள் வீட்டு அடுப்பு எரிகிறது.
பீடிகள் உற்பத்தி இவள் விரல்களில்.
***
காலையில் இமைகள் திறந்தும்ஒளி புகவில்லை உள்ளே
காற்றில் எதையோ தேடியபடியே கைகள்.
கூட்டாளி யார் யாரென்று
Swine flu பீதியால் :-)
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/14/2009 12:12:00 AM 3 comments
ஓர் தூறல் வேளையில் தான்
உன் காதலை என்னுடன் பகிர்ந்தாய்
மற்றொரு மழை நாளில்
உன் பிரிதலை எனக்குச் சொன்னாய்.
இரண்டுத் தருணங்களிலுமே
என் சார்பாக அந்த வானமும்
நெடுங்கண்ணீர் சிந்தியமையால்,
என் கண்கள்
கண்ணீர் கசித்ததை
நீ அறிந்திருக்க நியாயமில்லை.
Labels: காதல்
Posted by Suresh K at 8/14/2009 12:10:00 AM 2 comments
Monday, August 10, 2009
ரயில் பயணம்
இரண்டு மாதம் முன்னரே
முன் பதிவு செய்து
குட்டித் தலையனையும்
சின்னப் போர்வையும்
மறவாமல் கொண்டு வந்து
என் படுக்கைக்குச் சென்றேன்.
அருகில்...
குறட்டையில் சுவாசிக்கும் இருவர்
சிவராத்திரி கச்சேரி நடத்தினர்
ஆர்ப்பாட்டமாய்...விடியவிடிய.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:28:00 PM 3 comments
பேருந்து நிலைய வாசலுக்கே
ஓடிச் சென்று
பேருந்தைத் துரத்தி
கூட்டத்தில் இடி பட்டு
ஒரு செருப்புப் பிய்ந்து
படியில் மிதி பட்டு ஏறி
ஒருவனின் கெட்ட வார்த்தை
அர்ச்சனைக் கேட்டு
மஞ்சள் பை இருக்கையில் வீசி
இடம்பிடித்து அமர்ந்ததும் தெரிந்தது,
பேருந்து மாறி ஏறியது.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:25:00 PM 1 comments
துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
கயிற்றில் கட்டப்பட்ட இரு ஆடுகள்.
கசாப்புக் கடைக்குப் பின்னால்.
***
மகளின் காதல் கடிதங்களைத்
தீயிட்டுக் கொளித்தினார் தந்தை.
சாதி அதில் குளிர் காய்ந்தது.
***
அவள் இவளைப் பார்த்துப்
பொறாமைப் பட்டாள் கல்யாண வீட்டில்
கவரிங் நகையெனத் தெரியாமல்.
Labels: ஹைகூ போல்....
Posted by Suresh K at 8/10/2009 02:19:00 PM 2 comments
தீவிரவாத ரயில் குண்டு வெடிப்பில்
தூக்கியெறியப் பட்டபோது
இவைகள் சேர்ந்தன.
பல காலமாய் பிரிந்திருந்த
அந்த இரு தண்டவாளங்களும்
விவாகரத்துக் கோரி விண்ணப்பத்திருந்த
அந்தக் கணவன் மனைவி சடலங்களும்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/10/2009 02:14:00 PM 6 comments
Friday, August 7, 2009
Labels: காதல்
Posted by Suresh K at 8/07/2009 12:05:00 AM 4 comments
Thursday, August 6, 2009
தோல்விகள் கட்டியணைத்து
வெற்றிகள் எக்கி நின்று
எகத்தாளம் செய்தன முன்பு.
உன் வருகைக்குப் பின்
தோல்விகள் என்னிடம்
தோற்றுப் போய்விடுகின்றன.
வெற்றிகள் நிபந்தனை அற்ற
நிரந்தரக் கூட்டணி வைக்கின்றன.
நம்பிக்கையே!...
என்னுள் நீ வந்தமைக்கு நன்றி!
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/06/2009 11:39:00 PM 1 comments
அந்த நால்வர் அணி
தலைவரை இரண்டு துண்டுகளாய்
உடைத்துச் சென்றது.
மீண்டும் தலைவரை
மற்றொரு இடத்தில்
கட்-அவுட் ஆக
சிரிக்க வைக்க.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/06/2009 11:36:00 PM 0 comments
Tuesday, August 4, 2009
நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து
என்னை மீட்க எண்ணி
உன் உதட்டுச் சாயத்தை
என் நகங்களில் பூசிவிட்டாய்.
கை சூப்பும் குழந்தையின் விரல்களில்
வேப்ப எண்ணை தடவி விடுவது போல்.
ஆனால்...???
Labels: காதல்
Posted by Suresh K at 8/04/2009 11:35:00 AM 1 comments
நிழல் நண்பன்....
சுற்றித் திரியும் நண்பனவன்
இரவானதும் மறைந்து விடுகிறான்.
அவனுக்கும் மனைவியொருத்திக்
காத்திருப்பாள் போல।
* * * *
வெவ்வேறு வண்ணத்தில்
நான் ஆடை அணிந்தாலும்,
என் நிழலவனுக்கோ
எப்போதும் கருப்புச் சட்டை தான்.
தெரு முக்கில் உள்ள
பெரியார் சிலையை
நான் கடக்கும் போதெலாம்
சாஷ்டாங்கமாய் அவர் கால்களில்
விழுகிறான் எப்போதும்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:14:00 AM 2 comments
காத்திருப்பு
ஒரு மணி நேரத்திற்குள்
நான்கைந்து அடிகள்
வளர்ந்து விட்டேன்.
மாலை நேர வெயிலில்,
என் நிழல் மூலம்.
Labels: காதல்
Posted by Suresh K at 8/04/2009 11:12:00 AM 1 comments
மன அமைதி
பொருளாதாரச் சரிவு
ஆட்குறைப்பு
அலுவலகக் கெடுபுடி
தலை மேல் கத்தி,
எப்போதும்.
மருத்துவரின் மாத்திரையும்
சுவாமிஜியின் தியானமும்
தராத மன அமைதியை,
தொட்டிலில் தூங்கும்
என் குழந்தையின்
இரண்டு நிமிட கனவுச் சிரிப்பு
தந்து விடுகிறது.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:10:00 AM 3 comments
ஆறாம் அறிவு
பரண் மேல் ஏறுவதாகட்டும்,
மரம் விட்டு மரம் தாவுவதாகட்டும்,
ஹாஸ்ய சேட்டைகள் செய்வதாகட்டும்,
கிராமத்துக் குழந்தைகள் யாவரும்
நம் மூதாதையரை நினைவூட்டி
டார்வினை மெய்ப்படுத்தவேச் செய்கின்றனர்.
பெரியவர்களான நாம்தாம்
சற்று அந்நியப்பட்டு விடுகிறோம்,
ஆறாம் அறிவால்.
Labels: உணர்வுகள்
Posted by Suresh K at 8/04/2009 11:05:00 AM 0 comments

