Tuesday, August 4, 2009

நிழல் நண்பன்....



கல் முழுதும் என்னோடு
சுற்றித் திரியும் நண்பனவன்
இரவானதும் மறைந்து விடுகிறான்.
அவனுக்கும் மனைவியொருத்திக்
காத்திருப்பாள் போல।
* * * *

வெவ்வேறு வண்ணத்தில்
நான் ஆடை அணிந்தாலும்,
என் நிழலவனுக்கோ
எப்போதும் கருப்புச் சட்டை தான்.

தெரு முக்கில் உள்ள
பெரியார் சிலையை
நான் கடக்கும் போதெலாம்
சாஷ்டாங்கமாய் அவர் கால்களில்
விழுகிறான் எப்போதும்.

2 comments:

இரசிகை said...

viththiyaasamai ullathu.....

Unknown said...

nice thought..superb...