Monday, May 25, 2009

ஒரு வரி, இரு வரிக் கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜாதா அவர்கள் 'ஆனந்த விகடனில்' தமிழில் ஓரிரு வரிகளில் கதை சொல்லும் முறை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு முழு நீளக் கதை போல் உணர்வுகளை, காட்சிகளை வெளிப்படுத்தாவிடினும் ஒரு சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்தக் கூடியது.அப்போது வாசகர்களுக்குப் போட்டிகள் கூட நடத்தினார்

 திகில், நகைச்சுவை போன்ற சில தலைப்புகளில் உதாரணங்கள் தந்திருந்தார். அவர் அது வரை படித்ததில் சிறந்தது என்று குறிப்பிடிருந்தது,

உலகின் கடைசி மனிதன் அறையினுள் இருக்க, கதவு தட்டப்பட்டது  

 

தலைப்பைத் தவிர்த்து, ஒன்று அல்லது இரு வரிகளில் கதை சொல்ல நானும் முயற்சி செய்தேன். அவற்றுள் சில இங்கே...:)

 

தலைப்பு: மனநல மருத்துவரின் குழப்பம்

'டாக்டர், இவன் தான் நான் கூட்டி வந்த பேஷண்ட்'.

'ஐயோ! பொய் சொல்றான் டாக்டர்.'

 

தலைப்பு: தீபாவளி

முன் வாசலில் பட்டாசு ராக்கெட் கொழுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

கொல்லைபுறம் வைக்கோல் போரில் பற்றி எரியும் தீயின் வெப்பம் தாங்காமல் அலறிக் கொண்டிருந்தது எங்கள் பசு.

 

தலைப்பு: 'நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

 இறந்து போன தன் காதலி தந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையைக் கலக்கத்துடன் பார்த்தார், மறு நாள் தன் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப் போகும் பாலு தாத்தா.

  

ஓர் உயிரைக் கொடுத்து,  ஓர் உயிரின் அழிவிற்கு வித்திட்டான் லட்சுமியின் எய்ட்ஸ் கணவன். (தலைப்பின்றி)

4 comments:

இராஜசேகரன் துரைராஜ் said...

Have you adopted from the book or you written them?

Suresh K said...

The first example was mentioned by Sujatha in the magazine....rest were my own da :)

இராஜசேகரன் துரைராஜ் said...

சூப்பர் நண்பா...
நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் - மிகவும் அருமை நண்பா... வாழ்த்துகள்...

இரசிகை said...

nalla muyarchi..