Saturday, June 20, 2009

யாரேனும் சொல்லுங்களேன்...

எப்பொழுதும்
பழைய பாடல்களே விரும்பும் அவளிடம்,
புதுப்பாடல்கள் ஏதேனும்
கேட்கச் சொல்லுங்களேன்...

அவள் சாய்வு நாற்காலியில் உட்காரும் போது
எனக்கு சுகமாய் இருக்கும் என்பதையும்
அவள் வயிறு குலுங்கச் சிரிக்கும் போது
ஊஞ்சலாடுவது போலிருக்கும் என்பதையும்
சேர்த்தேச் சொல்லுங்கள்.

முடிந்தால்...
யாரேனும் அவளை
சாய்வு நாற்காலியில் உட்காரச் செய்து
புதுப்பாடல்கள் கேட்கச் செய்து
அதிகம் சிரிக்க வையுங்களேன்...

கருவறையிலிருந்து வெளி வந்தவுடன்
மறவாமல் நன்றி சொல்வேன் உங்களுக்கு!

0 comments: