Sunday, June 28, 2009

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்...

திருடுவதே குற்றமெனும் போது,
களவாடப்படுவதே தெரியாமலிருக்கும்
உன்னிடமிருந்து கவர்வது
மிகப் பெரிய குற்றமே.

மன்னிப்பு வேண்டி நிற்கிறேன்.
உன்னிடமிருந்து
உனக்கே தெரியாமல்
சில கவிதைகள்
திருடியமைக்கு.
உன் கவிதை புத்தகத்திலிருந்து அல்ல.
உன் கண்களிலிருந்து.

இதுவும் திருட்டு தான்.
சற்று தாமதமானாலும்
புரிந்து கொண்டேன்
என் பிழையை.

மன்னித்து விடு.
மன்னித்து என்னை
கள்ளன் என்றாலும் சரி
கவிஞன் என்றாலும் சரி
கணவன் என்றாலும் சரி
ஏற்றுக் கொள்கிறேன்,
மனப்பூர்வமாய்.

0 comments: