Monday, June 22, 2009

ஏக்கம்

கல்லூரி முடித்து வேலையின்றி,
கண்களில் குற்றவுணர்ச்சி தேக்கி
எவரேனும் எப்பணிக்கேனும்
அழைக்க மாட்டார்களாவென ஏங்கி,
சொந்த வீட்டிலோ உறவு வீட்டிலோ
அண்டிப் பிழைக்கும் நாட்களில்,
வைரமுத்து கூற்று போல்
காதலித்தால் மட்டுமல்ல,
வேலைக்கான காத்தலிலும்
தபால்காரன் தெய்வமாகிறான்.

ஒவ்வொரு நாளும்
அவன் தெருவைக் கடக்கையில்,
கண்களின் ஏக்கம்
துரத்திச் செல்லும் அவனை.
தீவிரபக்தன் சாமி ஊர்வலம்
பின்னோடுவது போல்.

என்றோ அவன் தரப்போகும்
அந்த நியமன உத்தரவிற்காக
காத்துக் கிடக்கும் மனது.
பிராசாதத்திற்கேங்கும்
கோயில் பிச்சைக்காரன் போல்.

0 comments: