Friday, August 28, 2009

வியாபாரம்

'ஹலோ...'

'ஹலோ ரகுராமன்!'

இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

'ஆனா...என்னோட பேரு எப்படி உனக்குத் தெரியும்?'

'நீங்க வந்ததுமே உங்க முகத்த படம் பிடிச்சேன். அதை வெச்சு இணையத்துல நுழைஞ்சு 'உலக மக்கள் தகவல்கள்' தளத்த ஹேக் (Hack) செஞ்சு உங்க பேர கண்டுபிடிச்சேன்'

'இவ்வளவு சீக்கிரமாவா? '

'ம்ம்...நம்ப முடியலையா?'

'குட்... உன்ன மாதிரி சிலர பாத்திருக்கிறேன்... ஆனா நீ ரொம்ப புத்திசாலியா இருக்குற'

'பாராட்டுக்கு மிக்க நன்றி ரகுராமன்'

'சரி நேரா விஷயத்துக்கு வரேன்... உன்ன இப்ப நான் எதுக்காக வாங்கிச் செல்லனும்? நறுக்குன்னு பதில் சொல்லு பாக்கலாம்'

'மூணு காரணங்கள் இருக்கு ரகுராமன்'

'ஓ... சரி வரிசையா சொல்லு'

'முதலாவது, என்னால பங்குச் சந்தைல அடுத்த நாள் நடக்கிற விஷயங்களை 75% சதவீதம் துல்லியமா முதல் நாளே கணிக்க முடியும்... அதனால உங்களால நிறைய சம்பாதிக்க முடியும். இரண்டாவது, இப்ப உங்க வீட்ல இருக்குற மத்த எல்லா இயந்திர மனிதர்களை விட என்னால திறமையா வீட்டு வேலைகள் செய்ய முடியும்'

'மூணாவது விஷயம்?'

'நீங்க வந்த உடன நாம ரெண்டு பேரும் கைகுலுக்கும் போது உங்களோட உள்ளங்கை ரேகைய படம்பிடுச்சு பதிவுசெஞ்சு வெச்சிருக்கேன். இவ்வளவு நேரம் நீங்க பேசினதுல இருந்து உங்க குரலையும் பதிவு செஞ்சிருகேன். உங்களுக்கே தெரியும்.. இந்த இரண்டையும் வெச்சே உங்களோட வங்கிக் கணக்கு உள்ள என்னால நுழைய முடியும். நீங்க இப்ப என்ன வாங்கலைன்னா அடுத்து வரப் போற என்னோட எஜமான் கிட்ட என்னோட விசுவாசத்த காமிப்பேன்'

மெல்லிய புன்முறுவல் செய்தபின் தொடர்ந்தது...

'இந்தக் காரணங்கள் போதுமா?'

ரகுராமன் திகைத்துப் போனான்.


[கி.பி. 2035-இல் 'இயந்திர மனிதன் விற்பனைக் கடை'யினுள் நடந்த?!(நடக்கவிருக்கிற) ஒரு உரையாடல் ]

5 comments:

இரசிகை said...

kalakkurada........suresh.k:)

arputham!!

Suresh K said...

மிக்க நன்றி அக்கா!!

இரசிகை said...

neenga kettathuku naan pathil potten..thambi.

Karthik Sambuvarayar said...

Nalla karpanai.. :)

Suresh K said...

மிக்க நன்றி கார்த்தி...